Header Ads



107 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் விடுதலை, திஸ்ஸவும் வெளியேறினார்

107 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  தேசிய லொத்தர் சபை தலைவராக இருந்த போது 3 கோடியே 60 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார்  என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இதன்படி வழக்கினை விசாரணை செய்த கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிடிய, சரண குணவர்த்தனவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.  

2

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.