இலங்கை விவகாரத்தில் நரேந்திர மோடி ஆர்வத்துடன் செயற்படுகிறார் - ரணில் விக்கிரமசிங்க
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை உள்ளிட்ட வலய நாடுகள் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடன் செயற்படும் தலைவர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
நரேந்திரமோடியின் செயற்பாடுகள் இலங்கைக்கு அனுகூலமான வகையில் தாக்கம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக இந்திய இலங்கை உறவுகளை புதிய யுகத்தை நோக்கி கொண்டு செல்ல வாய்ப்பாக அமையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியாவுடன் காணப்படும் சம்பிரதாயபூர்வமான உறவுகள் மேம்படுத்தப்பட்டு புதிய யுகத்திற்கு ஏதுவான வகையில் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளர்ந்துவரும் அயல் நாட்டு வல்லரசிடமிருந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுமாறு அவர் இலங்கை வர்த்தக சமூகத்தினரை கோரியுள்ளார்.
Post a Comment