Header Ads



அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்காவை வெளுத்து வாங்கிய, சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வாய் காரணமாக சிறைச்சாலைச் சோற்றை ருசி பார்த்தவர் எனவும் அவரது வாய் கழிவு நீர் கால்வாய் எனவும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

வாய் காரணமாக சிறை தண்டனை அனுபவித்தும் அவர் திருந்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவை பெற்றி பெற செய்வதற்காக பெண்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட பெண் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் தொடர்ந்தும் அமைச்சர் திஸாநாயக்க குறித்து கேள்விகளை எழுப்பிய போது,

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட ஏனைய பிரதிநிதிகள் சிரமங்களை எதிர்நோக்கினர்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறித்து எஸ்.பி. திஸாநாயக்க கூறி கருத்துக்களை விமர்சித்து சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தனது கருத்தை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.