Header Ads



மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்குமாறு, மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து, தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை, 19 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் ரவூப் ஹக்கீமிடம் இதனை கோரிக்கையாக வலியுறுத்தியுள்ளதுடன், எதிர்வரும் 23 ஆம் திகதி, தபால் மூல வாக்களிப்பு நடைபெறுவதாகவும், அதற்கு முன்னர் கட்சி தனது இறுதித் தீர்மானத்தை வெளிப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு பதி வழங்கியள்ள ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டிருப்பது போல, கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து நிலவவில்லையெனவும், இதுகுறித்து அவர்களுடனும் கலந்துரையாடிவிட்டு, இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. என்ன நீங்க நடக்காத காரியத்த பத்தி பேசுறிங்க மக்களுக்காக நாங்க மாறினால் எண்களின் சுக போக வாழ்க்கை என்ன வாகும் பஹடி பண்ண வேண்டாம்

    ReplyDelete

Powered by Blogger.