ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் கறுப்பு பக்கம் நாட்டை சீர்குழைத்துள்ளது - மைத்திரிபால சிறிசேன
அரச சேவையாளர்கள் சுதந்திரமாக செயற்படகூடிய அரசாங்கம் ஒன்றை தாம் உருவாக்கவிருப்பதாக பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிங்கிரியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
உண்மையான சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் இடம் இல்லை.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் கறுப்பு பக்கம் நாட்டை சீர்குழைத்துள்ளது. மோசடிகளும், ஊழல்களும் அதிகரித்துள்ளன.
இராணுவத்தினர் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அரச பணியாளர்கள் பக்கச்சார்பாக பயன்படுத்தப்படுகின்றனர். இந்த நிலைமை எமது ஆட்சியில் மாற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

good keep it up
ReplyDelete