Header Ads



மைத்திரியின் மேடைக்கு தீ வைத்து, கைதானவர்களை விடுவித்த பிரதியமைச்சரின் பாதுகாவலர்கள் கைது

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த  அமைச்சு பாதுகாப்பு பிரிவின் மூன்று பொலிஸ் கான்ஸ்ரபிள்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களை கடத்துவதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களை கடத்துவதற்கு சந்தேகநபர்களான மூன்று பொலிஸ் கான்ஸ்ரபிள்களும் உடந்தையாக செயற்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.