Header Ads



மஹிந்தவுடன் பிரச்சாரம் செய்யும் சல்மானகான் - நடிகைகளும் வருகிறார்கள் (படங்கள்)

ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இருநூறு கோடி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று காலை கொழும்பை வந்தடைந்த சல்மான் கான் , பிற்பகலில் கொழும்பு பொரளையில் நடைபெற்ற ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலிண் பெர்ணான்டஸும் கலந்து கொண்டுள்ளார்.

இவரும் இன்று காலை சல்மான் கானுடன் இலங்கை வந்திருந்த நிலையில், இவருக்கு அன்பளிப்பாக நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபா பணம் மற்றும் பெறுமதியான வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே எதிர்வரும் நாட்களில் பெரும்பாலும் சமீரா ரெட்டி உள்ளிட்ட இன்னும் பல நடிகைகளும் ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களை தனது பிரச்சார மேடைகளில் ஏற்றுவதன் மூலம் ஆளுங்கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பெருமளவிலான பொதுமக்களை வரவழைக்க முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.


2 comments:

  1. இந்திய நடிகர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு முதன்முதல் எடுத்த கேவலம்கெட்ட அரசியலை ஆரம்பீீித்து வைத்த பெருமை மஹிநதவை சேரும் இத்தனை கோடியை ற்போது மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தால் நன்றியுள்ள மக்கள் நாட்டில் உருவாகும்

    ReplyDelete

Powered by Blogger.