Header Ads



எஸ்.பி. திஸாநாயக்கவை உடனடியாக பதவி விலக்குமாறு, புத்திஜீவிகள் கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வௌியிட்டமை தொடர்பில், அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உடனடியாக பதவி விலக வேண்டும் என, இலங்கை புத்திஜீவிகள் குழுக்களில் ஒன்றான த ப்ரைடே ஃபோரம் (The Friday Forum) தெரிவித்துள்ளது. 

"சந்திரிக்கா என்பவர் கீழே தள்ளி மிதித்து, வீதியில் ஓட வைக்கப்பட வேண்டியவர்" என எஸ்.பி.திஸாநாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் போன்றன தமது எதிர்ப்பை வௌியிட்டன. 

இந்தநிலையில் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலணை செய்யுமாறு த ப்ரைடே ஃபோரம் சட்டமா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது.

2 comments:

  1. கல்வி அமைச்சர் என்பது மிகவும் மதிக்கத்தக்கது அவர் முன்னுதாரணமாக இருக்கவேண்டியவர், ஆனால் இவனோ கழிசறை அதனால்தான் இதுபோன்ற வார்த்தைகளை உபயோகித்துள்ளான்.

    ReplyDelete
  2. சாரி பிரதர், அவர் கலவி அமைச்சராய் இருப்பாரோ?

    ReplyDelete

Powered by Blogger.