சோபித தேரர் இன்று வைத்தியசாலையில் அனுமதி - நேற்று அரச தரப்பினருடன் சந்திப்பு
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கோட்டே நாக விகாரை விகாரதிபதி மாதுளுவாவே சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை உறுதியாக கடைப்பிடித்து வருபவர் இவர். இந்நிலையில் சுகவீனம் காரணமாக இன்று காலை அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நெஞ்சுவலி அதிகரித்த நிலையில் மாலபேயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சோபித தேரருக்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட ஜனநாயக ரீதியான கோரிக்கையை முன்வைத்து வரும் சோபித தேரர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட போவதாக முன்னர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அரசாங்க தரப்பினரை அவர் நேற்று முன்தினம் சந்தித்திருந்தார்.
இதன் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மாதுளுவாவே சோபித தேரரை சாடியதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை நேற்று கோத்தபாய ராஜபக்ஷ, சோபித தேரரை அவரது விகாரையில் நேற்று சந்தித்திருந்தார்.

Post a Comment