Header Ads



ஜனாதிபதி தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முஸ்லிம்கள் ஆதரிப்பார்களா..?

எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிடக் கூடுமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 2ம் திகதி ஒர் வெள்ளிக்கிழமை என்பதனால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்படலாம் என அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் 2, 3 அல்லது 7ம் திகதி தேர்தலை நடாத்த முடியும் என ஜனாதிபதியின் குடும்ப ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளனர்.

முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிடக் கூடும் என்ற காரணத்தினால் 2ம் திகதியை தவிர்த்து 3ம் திகதி அல்லது 7ம் திகதியில் தேர்தலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று தினங்களை விடவும் ஜனவரி மாதம் 15 மற்றும் 21ம் திகதிகளிலும் தேர்தலை நடத்த வாய்ப்பு உண்டு என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை நாளில் மாகாணசபைத் தேர்தல் ஒன்றை நடாத்த அரசாங்கம் தீர்மானித்த போது முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் விசேட தொழுகையில் ஈடுபடும் தினம் என்பதனால் அந்த தினத்தில் தேர்தலை நடத்தினால் முஸ்லிம் அதிகாரிகளும் வாக்காளர்களும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மறுபுறத்தில் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும் தேர்தல்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.