Header Ads



அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய நிருவாகிகள்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று சனிக்கிழமை (01) சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் சிரேஷ்ட அங்கத்தர்வர்களான  மறைந்த எஸ்எம்.எம்.இப்றாஹிம், அலியார் முஸம்மில் மற்றும் ஏ.எஸ்.எம்.முஜாஹிதின் புதல்வியான காலம்சென்ற எம்.சீபா ஆகியோர்களுக்கு விசேட துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், கல்முனை பிர்லியன்ட் வினையாட்டுக்கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஏ.பழீல், கல்முனை பத்திரிகை விநியோகத்தர் ஏ.எம். ஹனீபா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக ரி.கே. றஹ்மத்துல்லாஹ், பொருளாளராக , யு.எம்.இஷ்ஹாக் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளின் முழு விபரம் வருமாறு,

தலைவர் – மீரா எஸ். இஸ்ஸடீன்.
உபதலைவர்கள் –ஏ.எல்.எம்.சலீம், யு. சம்சுதீன் (மிஸ்கீன்)
செயலாளர் – ரி.கே றஹ்மத்துல்லாஹ்.
உப செயலாளர்கள் –எஸ்.நடனசபேஷன், எஸ்.எல். முனாஸ்.
பொருளாளர் –யு.எம்.இஷ்ஹாக்.
கணக்காய்வாளர் – எம்.ஐ.எம். ஆரிப்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் – ஐ.எல்.எம்.றிஸான், பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.புஹாது, ஆர்.தில்லைநாயகம், எஸ்.சிராஜூதீன், எம்.ஐ. சம்சுதீன், எஸ்.எல்.எம்.பிக்கீர், யு.எல்.எம்.றியாஸ், எம்.எஸ்.ஷரிபுத்தீன்.

ஆலோசனை சபை உறுப்பினர்கள் –எம்.ஏ. பகுர்தீன், எம்.ச     ஹாப்தீன், எம்.எல்.எம்.ஜமால்டீன் ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். 


1 comment:

  1. இவர்கள் யாரும் அரசாங்கத்தின் தலையாட்டி பொம்மைகள் அல்ல போல் தெரிகின்றது. ஏனெனில் இவர்களின் எளிமையும் கூட்டம் நடைபெறும் இடத்தின் அழகும் சொல்கின்றதே!

    ஆயினும் இந்த நிலைமை மாறி சமூகத்தின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்ற்கு கொண்டுவரும் இவர்களின் வாழ்வும் பிரகாசிக்க ஏதாவது செய்தாக வேண்டும். யாரும் இதைப் பற்றி யோசிக்க மாட்டார்களா?

    ReplyDelete

Powered by Blogger.