Header Ads



கரையோர மாவட்டத்திற்கு அரசிடமிருந்து பச்சை கொடியா..? மு.கா. மைத்திரியுடனும் பேச்சு

முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள கரையோர மாவட்டம் குறித்து அரச தரப்பு சாதக நிலைப்பாட்டில் பேச்சுக்களை முன்னெடுக்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் இன்று காலை கூறினார்.

நேற்று பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஒருவரை சந்தித்துள்ள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனை தெரிவித்துள்ளதுடன், மிகவிரைவில் இதுதொடர்பில் அமைச்சர் ஜோன் செனிவிரட்னாவுடன் பேச்சு நடத்தப்படுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுநடாத்த முஸ்லிம் காங்கிரஸ் முயலுமெனவும் அந்த எம்.பி. ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

2 comments:

  1. கடந்த கிழக்கு மகனசபைத்தேர்தளிலும் கரையோர மாவட்டம் தருவதாக உறுதிமொழி தந்தார்கள் ஆனால் தரவில்லை. இப்போதும் ஜனாதிபதி தேர்தலுக்காக உறுதிமொழி தருவார்கள் ஆனால் கரயோரமவட்டம் தர மாட்டார்கள் நம்ப வேண்டாம்

    ReplyDelete
  2. சொன்னதும் கேட்டதும்தான் மீதம் நடந்தது ஏதுமில்லை இனி நடக்கபோவதுமில்லை அல்லாஹ்வின் தீர்ப்பே தற்போது நடந்துகொன்டிருப்பது பொருமையுடன் காத்திருப்போம் நிட்சயம் நல்லதே நடக்கும்..............

    ReplyDelete

Powered by Blogger.