Header Ads



''அனைவரும் பிரஜைகள், அனைவரும் மன்னர்கள்'' என்ற அமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

ஜனாதிபதி தேர்தலுக்காக நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் இதுவரை கட்டுபணம் செலுத்தியுள்ளனர்.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச இதனை தெரிவித்துள்ளார்.

அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் என்ற அர்தத்தை கொண்ட  ஒக்கோம வெசியோ ஒக்கோம ரஜவரு அமைப்பு, ஜனசெத முன்னணி, சோசலிச சமத்துவ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி ஆகியன இவ்வாறு கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.