Header Ads



மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கத்தை கையேற்கவேண்டிய தேவையுள்ளது - ரணில்

ஐக்கிய தேசிய கட்சி தரப்பினர் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தரப்பினர் ஒருவொருக்கொருவர் எதிராக செயற்படாது, ஒரே முன்னணியில் ஒன்றிணைய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அனுராதப்புர இணை குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் மக்கள் 20 வருடகாலமாக முகங் கொடுக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே அரசாங்கத்தை கையேற்க வேண்டி தேவை உள்ளது.

நான் 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தை கையேற்பதானது 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்தை கொண்டு வரும் நோக்கிலே இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்கட்சி தவைர் ரணில் விக்ரமசிங்ஹ வலியுறுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.