Header Ads



லெபனானில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கையர்கள்..!

லெபனானில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

லெபனானுக்கான இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் சுமார் 85000 இலங்கையர்கள் ஈடுபடவுள்ளனர்.

இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக லெபனானின் இலங்கையர் சங்க ஒன்றியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

லெபனான் வாழ் இலங்கையர்களின் தேவைகளை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் நிறைவேற்றுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தூதரத்தில் கடமையாற்றி வரும் பதில் அமைச்சு ஆலோசகர் உரிய முறையில் கடமையாற்றுவதில்லை எனவும் அவரை மீள அழைத்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதில் அமைச்சு ஆலோசகர் முன்னாள் தூதுவரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கட்டணமின்றி தற்காலிக கடவுச் சீட்டை ஒரே நாளில் வழங்க முடியும் என்ற போதிலும், அதற்காக 175 அமெரிக்க டொலர் அறவீடு செய்வதுடன் ஒரு மாதம் கழித்தே தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

லெபனானில் பிறந்த இலங்கைக் குழந்தைகளுக்கு வீசா வழங்காது அவர்களையும் அவர்களது தாய்மாரையும் நாடு கடத்தும் நடவடிக்கைகளைகளுக்கு தூதரகமும் உடந்தையாக செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து லெபனான் வாழ் இலங்கையர்களின் நலனை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.