Header Ads



'ஜில்மாட்' திட்டத்தினால் மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாவது மட்டுமே மிச்சமாகும் - சஜித் பிரேமதாஸ

-Tm-

இந்த வரவு- செலவுத்திட்டமானது 'செலவு' இலக்கங்களை மாற்றும் 'ஜில்மாட்' திட்டமாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவரும் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி யோசனைகளை முன்மொழிந்தாலும் அது மக்களுக்கு கிடைக்காது. இதன் மூலமாக மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாவது மட்டுமே மிச்சமாகும் என்றார்.

நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர், எதிரணியை பார்த்து எப்படி பாங்கறியாதவனின் திட்டம் எப்படியென்று வினவினார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

No comments

Powered by Blogger.