Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கும், வாசகர்களுக்கும் நன்றி..!

சிறுநீரக நோய்ச் சிகிச்சைக்காக நிதி உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல்

புத்தளம் புளிச்சாக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மர்ஹும் மஹ்பூப்  மரைக்கார் அவர்களின் மகளான பாத்திமா சாமிலா வயது 22 என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதன் காரணமாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்வதற்காக நிதியுதவி செய்யும்படி 13.06.2013ம் திகதி  ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அல்லாஹ்வின் கிருபையினால் அதிகமான வாசகர்கள் உதவிசெய்திருந்தனர். சிறுநீரகம் வழங்கும் நபர்கள் கிடைக்க தாமதமான காரணத்தினாலும், சில சிறுநீரகம் ஒத்துவராத காரணத்தினாலும் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சென்ற வாரம் சிகிச்சை நடைபெற்று தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

எனவே ஜப்னா முஸ்லிம் இணையத்தள ஆசிரியர், வாசகர்கள், மற்றும் தனவந்தர்கள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். 

No comments

Powered by Blogger.