Header Ads



திஸர பெரேராவுக்கு நியூஸிலாந்து தேசிய அணி அழைப்பு - தலையிட்டார் ஜனாதிபதி மஹிந்த

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள அனைத்துத்துறை ஆட்டக்காரர் திஸர பெரேராவுக்கு நியூஸிலாந்து தேசிய அணியில் சேர்ந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை பெரேரா தற்போது நிராகரித்துள்ளார்.

இலங்கை அணியில் இருந்து  தள்ளி வைக்கப்பட்ட அவருக்கு பிரஜாவுரிமை தருவதற்கும் தேசிய அணியில் இடம்தருவதற்கும் நியூஸிலாந்து அழைப்பு விடுத்தது. இதனை முன்னதாக பெரேரா ஏற்றுக்கொண்டார்.

எனினும் தாய் நாட்டை விட்டு செல்ல விருப்பமின்மையால் அதனை நிராகரித்து விட்டதாக திஸர பெரேரா கூறியுள்ளார்.

இந்தவிடயத்தில் தலையிட்டு தீர்வைப் பெற்றுத்தர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.