Header Ads



சிங்கள பௌத்தர்களின் நலன் பேண, அத்துரலியே ரத்ன தேரரினால் அரசியலமைப்பு தயாரிப்பு

சிங்கள பௌத்த மக்களின் நலன் பேணலுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு வரைபு ஒன்றை அத்துரலியே ரத்ன தேரர் தயாரித்துள்ளார்.
இலங்கையில் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு மாற்றாக இந்த வரைபு அரசியலமைப்பைத் தயாரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் சிறுபான்மை இன மக்கள் அதிக சலுகைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள இனவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை போன்ற விடய்ஙகள் காரணமாக அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்தும் எழுப்பப்படுகின்றது.

இந்நிலையில் சிங்கள பௌத்த மக்களின் நலன் பேணல், பௌத்த கலாசாரத்துக்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக அவரது வரைபு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபு அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த விகாரையொன்று அமைந்திருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையான பிரதேசத்தில் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.

சிறுபான்மை இன மக்களின் கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசிய விடுமுறை அளிக்கப்பட மாட்டாது போன்ற விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

3 comments:

  1. கண்டவனெல்லாம் நினைத்ததை சட்டமாக்க எண்ணுவதை முதலில் நிறுத்து.

    ReplyDelete
  2. may allah give hidayath for our buddhist brothers.
    shahaba umar,ikirima,amru ibnu thufail,hamza,wahsi likewise
    give them hidayath ya allah,our beloved rasool sal.newer hate any people.
    insha allah we try be a good muslim

    ReplyDelete

Powered by Blogger.