மஹிந்த ராஜபக்ஸவுக்கான ஆதரவை முஸ்லிம்களிடையே காணமுடியவில்லை - தயான் ஜயதிலக்க
சிறுபான்மையினர் மத்தியில் இருந்து வரவேற்பை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன போராட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டு வந்தமையால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது.
எனினும் அதனை இன்று காணமுடியவில்லை. நாட்டின் தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த தவறியமையே இதற்கான காரணம் என்றும் தயான் ஜயதிலக்க ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலத்துக்கு காலம் உருவாகி வரும் முஸ்லிம் தீவிரவாதம், அதற்கு இலங்கையில் உள்ள ஆதரவு என்பன பாரதூரமனவை என்றும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment