Header Ads



தேசிய சூறா சபையின் கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன உரையாற்றுகிறார்..!

Gtn

தேசிய சூரா பேரவையின் கூட்டத்தில் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி தேசிய சூரா பேரவையின் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

தேசிய சூரா பேரவை பிரிவினைவாதத்தை தூண்டி வருவதாகவும் இதனால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டுமெனவும் சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா இயக்கம் கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது. சூரா பேரவையை தடைசெய்யுமாறு பொதுபலசேனா இயக்கம் அரசாங்கத்திடம் நேரடியாகவே கோரிக்கை விடுத்திருந்தது.

பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்து வரும் ராஜித சேனாராட்ன கூட்டத்தின் பிரத பேச்சாளராக பங்கேற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.