Header Ads



'ரவூப் ஹக்கீம்' உம்றா செல்லவில்லை - புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாம்..!

இலங்கையில் முஸ்லிம்;கள் ஒடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சர்வதேச முஸ்லிம் அமைப்பு ஒன்றிடம் முறைப்பாடு செய்துள்ளார். ரவூப் ஹக்கீம் அண்மையில் சவூதி அரேபியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாத்திரை நோக்கில் இந்த விஜயம் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஹக்கீம் புறப்பட்டு சில மணித்தியாலங்களில் அவர் புனித யாத்திரை மேற்கொள்ளவில்லை என புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்த ரவூப் ஹக்கீம், இஸ்லாமிய ஒத்துழைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் அமீன் மதானியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கல்முனை மேயர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று ஹக்கீமுடன் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.அலுத்கம வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஹக்கீம், இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தியுள்ளார்.

வன்முறைகளுடன் பொதுபல சேனா இயக்கத்திற்கு நேரடித் தொடர்பு காணப்பட்ட போதிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரவூப் ஹக்கீமுடன் பயணம் செய்த ஒரு நபர், ஜனாதிபதியை இரத்த தாகமுடையவர் என விபரித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இந்த தகவல்களின் காரணமாக ஜனாதிபதியும் அரசாங்கமும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சர் ஹக்கீம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் ஒத்துழைப்புப் பேரவையின் பொதுச் செயலாளருக்கு நீண்ட விளக்கமொன்றை அளித்துள்ளார்.ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஹக்கீம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. gtn

4 comments:

  1. this he is duty if really he done its great

    ReplyDelete
  2. oky.if mr Hakem did his duty that great job.

    ReplyDelete
  3. Uva mahana therzalukku thoofam podranga muslimgale ivarhalay nambiyazu pozum muzalavazu katchiyin peyarai maatru illayenral muslim congresai kizhakku mahanathukkul maathiram vaithukkollunga. Ilankayil ulla ella katchikkum aazaravaalarhal ivarhalkatchiyil mattum katchipporalihal ennangada izu sema comedyilla. Makkale iniyum ivarhalai nambi emara vendam.muslim Congress thetkil irundhalthan ungalkkaha pesuvarhal enru ninaikka vendam.sampandhan jaffnavil irundhu kural koduthar. Mano ganesan kural koduthar. Azanal ungalukku m.c. thevayillai enru eppo neengal mudivu edukkinreerhalo appo ellam allah shirappakki tharuvan. Izellam uwa mahana vakkuhalai pirichi sandhana vatriperuvazatku podum thittangal.dhayavu seyzu iniyum indha narihalai nambazeenga ivarhal pazavikkaha ezayum seyvaanga. Pazavi veri pidithavarhal. Pazavikkaha kaattiyum kudupanga koottiyum kuduppanga
    Nonbai pidithukondu eluzuhiren allah ennai mannikkanum.dhayavu ilaiyavarhal miha kavanamaha Irukkanum.m.c.vandhazum muzal kolai bruwalaiyil enru ninaikiren.nawfer enra sahozerer.madawalyil ethanaiper. Oruvanai izhandhal andha kudumbathitku ulla izhappu avanukku vandhalthan theriyum ize neram rauf hakeemdyo allazu n.m. ameendayo mahano mahalo aluthgamyil nadandhazu pol nadandhu shaheedhakkappattal.nennga poy president udano gotabeyudano nail a ilichikkondu nonbu thirakka povingala. Izukku mattum poraalihal thalaivaridam pazilai keylunga. Manizanukku allah moolayai thandhirkkiran.izanpirahaavazu sindhithu seyalatruvom jaffna muslim izai publish pannumo thriyala.allahvukkaha publish pannunga. Paavam sindhikka theriyaza muslimgal nerya irukkiranga.please.

    ReplyDelete
    Replies
    1. எமது  சபாப்ப அமைபின் தலைவர் OIC Saudi Arabia விடயமாக அவதானித்து வருகிறார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சமீபத்தில் ஜிந்தால் உள்ள Organization Islamic conference என்ற (OIC) ஸ்தாபனத்திற்கு சென்று இலங்கையில் களுத்துறை மாவட்டத்தில் யுத்தம் நடைபெறுகிறது நூறுக்கும் அதிகமான முஸ்லிம்களை சிங்களவர்கள் கொன்றதாக பிலையான தகவல் கொடுத்திருக்கிறார்கள். அலுத்துகம பகுதியில் கடந்த ரமழான் முதல் பாதுகாப்புடன் மத அனுஷ்டானங்கலை முஸ்லிம்கள் செய்து வருகிறார்கள் . பெரும்பான்மை மக்களுடன் அமைதியான வாழ்க்கை.
       இங்கு யுத்தம் நடக்கிறது முஸ்லிம் மக்கள் அளிக்கப்படுகிறது என்று ரவுப் ஹக்கீம் கூறியதை அடுத்து. இலங்கையில் உள்ள Saudi embassy  தற்போது நிலவும் உன்மையான நிளபரத்தை விவரமாக சொள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஓட்டம் பிடித்தனர்.முஸ்லிம் காங்கிரஸ் நோன்பு காலத்தில் இலங்கையில் யுத்தம் நடக்கிறது என்று அபாண்டமான பொய் சொல்லி பணம் வசூல் செய்ய வந்தவர்கள் அம்பலமாகியுள்ளது. இவர்கள் இலங்கை தூதரகத்திற்கு தெரியாமல் உம்ரா visa ல் வந்ததும் இலங்கை அரசுக்கு Saudi Arabia தெரியப்படுத்தி உள்ளது. எனவே ஒரு நீதி அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு ஏன் இப்படி கள்ளத்தனமாக விஜயம் செய்தார் யாருக்குபயப்பட வேண்டும்.
      தலை நிமிர்ந்து officially சென்று சந்தித்து இருக்கலாமே நீதி அமைச்சர் முஸ்லிம்களுக்கு நீதியை பெற்று தர முடியாது போனாள் நாட்டில் நீதியய் நிலைநாட்ட முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து முஸ்லிம் மக்களுக்காக போராட வேண்டும். இது யாருக்கு காடும் நாடகம்.சபாச அமைச்சர் ரிசாத்பதுருதீன் BBC கடும் போக்கு அமைப்பை நீதிமன்றம் வரை எடுத்து சென்றார்.ஜனாதிபதி உடன் பாராளுமன்ற த்தில் மோதினார் ஆயிரத்துக்கு மேல் பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்து ஏலய் களுக்கு ஒரு கிராமத்தை கொடுத்தார்.மன்னார் என்ற இடத்தில் அனாதை இல்லம் பாடசாலை உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நிரைவேற்றி உள்ளார். ஒரு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடி என்ற நகரத்தை இலங்கையிலே மிகவும் முன்மாதிரியான நகரமாக அமைதுல்லார்.அதாவுல்லா அவரது கிராமத்தை அலகாக அமைத்துள்ளார். மான்பு மிக முஸ்லிம் காங்கிரஸ் நீதி அமைச்சர் அவர்களே நீங்கள் என்ன முஸ்லிம் மக்களுக்கு செய்து கொடுத்தீர்கள் ???
      சபாப் ஒன்றியம்

      Delete

Powered by Blogger.