Header Ads



நான் குழந்தையை காண விரும்புகிறேன் - வாசுதேவ நாணயக்கார

தான் பிள்ளை பெற போகும் தாயை போன்றவன் எனவும் தேசிய நல்லிணக்கம் என்ற குழந்தையை காணத் தான் விரும்புவதாகவும், அதற்காக பொறுமையாக காத்திருப்பதாகவும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினர் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவு வழங்கினர் என்பது பொதுமக்களின் கருத்து. அவ்வாறு மக்கள் மத்தியில் கருத்தை ஏற்படுத்தியது குறித்து நான் அவர்களை குறைகூற மாட்டேன்.

ஆதரவு வழங்கினார்களா இல்லையா என்பது வேறு விடயம். மக்கள் மத்தியில் அப்படியான கருத்து ஏற்படும் வகையிலான பின்னணி சம்பவங்கள் ஏற்பட்டன.

ஆனால், எதிர்க்கட்சி இதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி முயற்சித்து வருகிறது. ஏதாவது ஒரு கல்லை எடுத்து எதிர்க்கட்சிகள் எறிந்து பார்க்கின்றன.

சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் தலைவர்கள் எடுக்கும் தீர்மானங்கள், சட்டம் அந்த சந்தர்ப்பத்தில் செயற்படுத்தப்படாமை இந்த விடயங்களின் அடிப்படையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு இந்த கருத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கேள்வி எழுப்பும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. எனினும் அவர்களை இதனை வேடிக்கை வினோதமாக செய்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது நாட்டில் இதனை விட மிகப் பயங்கரமான இனவாதத்தை ஏற்படுத்திய கட்சி எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.