டுபாயில் இலங்கையர் பலி, குவைத்தில் இலங்கையரை கொலை செய்தவர் கைது
டுபாயில் கட்டமொன்றிலிருந்து வீழ்ந்து இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிக்கா என்னும் இடத்தில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டிடத்தின் நான்காம் மாடியிலிருந்து குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் டுபாய் உள்துறை அமைச்சிற்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இலங்கையரின் ஆள் அடையாள விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. சம்பவத்தை ஐந்து பேர் நேரில் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பெண்ணொருவரை அடித்து கொலை செய்த குவைத் பிரஜை
குவைத் பிரஜையொருவர் இலங்கைப் பெண்ணை தாக்கிக் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் முன்னாள் கணவனே இவ்வாறு அடித்துக் கொலை செய்துள்ளார்.
குறித்த குவைத் பிரஜை, முன்னாள் மனைவியை தொடர்பு கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டின் முதல் மாடிக்கு அழைத்துள்ளதாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பேரும் நடத்திய பேச்சுவார்த்தை வாக்கு வாதமாக மாறி பின்னர், குவைத் பிரஜை இலங்கைப் பெண்ணின் தலையில் கடுமையாக தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலையில் ஏற்பட்ட காயங்களினால் குறித்த பெண் உயிரழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Post a Comment