Header Ads



சவுதி அரேபியா விபத்தில், தர்கா நகரைச் சேர்ந்த ஒருவர் வபாத்

சவுதி அரேபியாவில் தொழில் புரிபவர்கள் புனித உம்ராக் கடமையை முடித்து விட்டு வரும் வலியில் ஏற்பட்ட விபத்தில் தர்கா நகரைச் சேர்ந்த முஹம்மத் சலீத் முஹம்மத் சப்வான் மற்றும் இந்தியா கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளனர்.

மதீனாவிலிருந்து ஜும்மாத் தொழுகையை முடித்து விட்டு திரும்பி வரும் வலியில் சிறிது ஓய்வெடுக்க பஸ் வண்டி நிறுத்தியிருந்த போது பின்னால் வந்த ஜீப் வண்டி மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது இரு ஜனாஸாவும் ராபிக் வைத்திய சாலையில் வைத்துள்ளது.

தகவல் சவுதியிலிருந்து ரிஸ்வான் காலித்.

No comments

Powered by Blogger.