Header Ads



அளுத்கமையின் ஈமானியப் போராட்டத்தில்..!

(Thazeem Jabbar)

இன்னும் மூன்று நாட்களில் மறந்துபோகும் அல்லது அரசியல் அசிங்கங்களால் மறக்கடிக்கப்படும் அளுத்கமையின் ஈமானியப் போராட்டத்தில் இறுதி விளைவு எம் இஸ்லாமிய இதயங்களை நோகடித்த எம் சகோதரங்களை காயப்படுத்திய காவிக் கயவர்களின் ஒவ்வொரு கரங்களும் ஒவ்வொரு நெஞ்சங்களும் பிளக்கப்பட்டு அவற்றிற்கான தண்டனையை அனுபவிக்கின்ற தருணம் மிக விரைவில் வரும்.

இஸ்லாமியர்கள் நாங்கள் கொள்கையால் வேறுபட்டுக் கிடந்தாலும் கலிமாச் சொன்ன ஓர் உன்னத பிணைப்பினால் இறுகக் கட்டப்பட்டவர்கள். எங்கள் சகோதரர்கள் யாருக்கு அநியாயம் இழைக்கப்பட்டாலும் எங்கள் ஒவ்வொருவரினதும் நெஞ்சம் பதறுகிறதல்லவா இதுதான் எங்களின் மார்க்கம் கற்றுத்தந்த ஒற்றுமை. உலகின் எங்கோ ஒரு மூலையில் எங்கள் சமூகம் பாதிக்கப்பட்டால் மூலை முடுக்கெல்லாம் பிரார்த்தனையும் தொழுகையும் நோன்புமாக அல்லாஹ்விடம் இறைஞ்சும் இஸ்லாமியத்தோடு இணைந்திருக்கும் மக்கள் நாங்கள். ஏங்கள் நாட்டிலே சிங்கள பயங்கரவாதிகளால் எங்கள் இனத்தை ஒடுக்க முற்பட்டால் பார்த்துக்கொண்டு பல்லிளிக்க நாங்கள் ஒன்றும் கோளைகளல்ல.

பொறுமை என்ற ஆயுதம் கொண்டு அலை கடலாய் ஆரப்பரிப்போம் பொறுமையும் பொறுமை இழந்தால் சுனாமியாய் சுழன்றடிக்கவும் தயங்கமாட்டோம். வீரர் உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் இரத்தம் ஒடும் சமூகம் இது. சிங்கமாய் கர்ச்சித்த அலி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் புஜங்களில் விளையாடிய ஈமானுடன் பிறந்த வேங்கைகள் நாங்கள். உஸ்மான் ரழியல்லாஹூ அவர்களின் பொறுமையிலும் சித்தீக்குல் அக்பர் அவர்களின் சகிப்புத்தன்மையிலும் ஊறிய இதயங்கள் என்பதனால் அல்லாஹ்வின் பாதுகாப்போடு பொறுமையாய் இருக்கிறோம்.

ஆக்ரோசித்து முடிவெடுக்க நாங்கள் ஒன்றும் சிலை வணங்கிகளல்ல. இல்லாமையை வணங்கும் காபிர்களே உங்களால் ஆயதங்களால்தான் தாக்க முடியும். உங்கள் தாக்குதலால் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் எங்கள் ஈமானின் வலு அதிகரிக்குமே தவிர சற்றளவும் குறையாது. நாங்கள் வீர வரலாறுகள் கேட்டு வளர்ந்தவர்கள். 6 மாதக் குழந்தையின் தலையில் வாள் வைக்கும் கயவர்களே! ஏங்கள் குழந்தையும் சந்தோசிக்கும் சஹீதாக்கப்படணும் என்று. காவியுடையில் கலகம் விதைத்த கயவர்களே! எங்கள் பொறுமையை சோதிக்க முனைகின்றீர்கள். நாங்கள் ஒன்றும் இல்லாத ஒன்றை நம்பி வாழும் மூடர் கூட்டம் அல்ல. எல்லாவற்றையும் படைத்து ஆளும் அல்லாஹ்வை நம்பும் வீரத்தியாகிகளின் வாரிசுகள். உணர்ச்சிக்கு அடிமையாகி பேச்சுக்கு ஆடுகின்ற பாழும் பாம்புகள் அல்ல நாங்கள். எங்கள் உணர்வுகளின் இஸ்லாமிய ஈரம் படிந்திருப்பதால்தான் பொறுமையோடு காத்திருக்கிறோம் அல்லாஹ்வின் அழகிய தீர்ப்பை.

புத்ர் உஹது போர்க்களத்தில் கூட உயிரைத் துச்சமாக மதித்து மார்க்கத்துக்காய் எங்கள் உரிமைக்காய் போரிட்ட சமூகமடா நாங்கள். இன்று அடங்கிக் கிடக்கிறோம் என்று நினைத்திடாதே. நாங்கள் ஆரப்பரித்தால் அடங்கிவிடும் உங்கள் ஆட்டங்கள் எல்லாம். பொறுமை என்ற மிகப்பெரிய ஆயதத்தை ஈமானோடு ஏந்தி நிற்கின்றோம் அல்லாஹ்வின் அருளோடு. ஊங்கள் வாள் வீச்சுக்களும் கல்லெறிகளும் எங்கள் ஈமானிய பலத்தின் முன் தூசுக்களாய் பறந்துவிடும். நாங்கள் எப்போதும் மரணத்தைக் கண்டு பயந்ததில்லை ஏனென்றால் அல்லாஹ்வின் அருள் மறையும் எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் திரு வாய் மலர்ந்தருளிய வார்த்தைகளையும் கொண்டு மரணத்தை எதிர்கொள்ளத் துணிந்தவர்கள். மிகவிரைவில் எதிர்பாருங்கள் ஒவ்வொரு இஸ்லாமிய நெஞ்சங்களையும் காயப்படுத்தி ஒவ்வொரு காவிக் கயவனும் பதில் சொல்லும் நாள் வரும். அப்போதும் எங்களுக்குத் துணையாய் வல்ல அல்லாஹ்வும் அவன் தூதரும் துணை நிற்பார்கள்.

யா அல்லாஹ்! உன்னையும் உன் தூதரையும் ஈமான் கொண்டதற்காய் எம்மைத் தாக்கும் இந்தக் கயவர் கூட்டத்தை உன் தண்டனையைக் கொண்டு அழித்தொழித்துவிடுவாயாக அல்லது உன் ஹிதாயத்தைக் கொண்டு சீர்படுத்திவிடுவாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

1 comment:

  1. What an emotional advice and dhua.write more Mr jabbar

    ReplyDelete

Powered by Blogger.