நாங்கள் அடாவடி பொலிஸார்தான் - மஹியங்கனையில் மீண்டும் நிரூபித்தது பொதுபல சேனா
(JM>Hafeez)
மஹியங்கனைப் பிரதேசத்தில் புதையல் தோண்டுவதாகக் குற்றம் சாட்டி பொது பலசேனா அங்கத்தவர்கள் ஓர் இடத்தை முற்றுகையிட்டனர் (9.5.2014)
கிராந்துருகோட்டைப் பகுதியில் உள்ள ஒருகற்குழியை அவர்கள் பரிசீலித்தனர். கள் உடைக்கப்ட்டதற்கான சிதைவுகள் அங்கு காணப்பட்டன. இவர்கள் அங்கு செல்லும் போத சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது பல சேனாவின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்ததாவது,
பொலீஸார் எமது பணிகளில் தலையிட்டு குற்றம் குறைகளைக் கணகாணித்த போதும் கடந்த இரண்டு வாரங்களாக கல் வெடி வைத்து தகாக்கப்பட்டுள்ள புராதன பெறுமதி மிக்க இவ்விடம் பற்றி எதுவம் தேடாதவர்களாக அது வெறும் கருங்கற் குழி என்று இருப்பது கவலைதரும் விடயம் என்றார்.
பொதுபலசேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் மடவல ஜினமங்கலாராமாதிபதி நியங்கொட சாசனரத்ன தேரர் உற்பட இன்னும சில பிக்குகள் அங்கு சமூகமளித்திருந்தனர்.

If Any body clean your toilet pit ,get permision from bbs in future.
ReplyDelete