Header Ads



இதற்கோர் மந்திரம் சொல்லுங்கோ மஹிந்த ஐயா...!

(றிசானா பசீர்)

ஒரு கெரில்லா இயக்கத்தை தோற்கடித்து பிரபாகரனை வெட்டி வீழ்த்த உங்களால் முடியும். 30 வருட யுத்தத்துக்கு முடிவுகட்ட தெரியும். இராணுவத்தளபதி ராஜாதி ராஜன் சரத் பொன்சேகாவின் ஜெனரல் பட்டத்தைப் பறித்து சிறையில் அடைக்க சக்தி உண்டு. மெதமுல்லைக்கு வந்தால் அரசைக் கவிழ்ப்பது பற்றி  கற்றுக்கொடுக்க புத்தி உண்டு. அப்போதுதான் புத்த மலர் விபுசிகாவை நன்நடத்தை முகாமிற்கு அனுப்ப முன்அறிவு உண்டு. ஏன் பொதுப்பலசேனா பறயனை மனநோயாளிளை அங்கோடைக்கு அனுப்ப முடியாது ?

உலகிலுள்ள மொத்தப்பல்கலைக் கழகத்திலும் முதல் இடத்தைப்பிடித்துக் கொண்டது அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகம். இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட 100 பல்கலைக்கழகங்களில் இந்திய,  இலங்கை பல்கலைக்கழகங்கள் எதுவும் தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ராஜபக்ஷவினால் 'ரணில் அவ்வளவு துாரம் அமெரிக்கா ஹவார்ட் பல்கலைக்கழகம் சென்று அரசைக்கவிழ்ப்பது பற்றி கற்றுக்கொள்ள வேண்டியதில்லைஇ மெதமுல்லை வீட்டுக்கு வந்தால் கதவைப் புட்டிவிட்டு சொல்லிக்கொடுக்க முடியுமென்று மார் தட்டுகின்ற அரசே!........ஏன் கொம்பேறி மூக்கன் பொதுப்பல சேனாவை அடக்கமுடியவில்லை ?? வேதாளத்தை படுகுழியில் போட வேண்டும். இல்லையென்றால் அது திரும்பத் திரும்ப முருங்கை மரம் ஏறும்தான். பொதுப்பல சேனாவை அடக்க ஒரு கடிவாளம் இடுங்கள். அல்லது முட்டுக்கட்டை போடுங்கள் அல்லது இருட்டடி அடியுங்கள். முடியாது போனால் ஒரு மந்திரம் சொல்லிக் கொடுங்கள். மஹிந்த சிந்தனை போன்று மஹிந்த மந்திரம் ஒன்று கிடையாதா ???

எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு கடைசிச் சந்தர்ப்பம் இதுதான். இதில் தேர்வடையத்தவறினால் அவருக்கு அரசியல் சாவுமணி நிச்சயம் அடிக்கும். ஹவார்ட் பல்கலைக்கழக அறிவை மிஞ்ச ஒரு பல்கலைக்கழகம் இல்லையென்பதால் நிச்சயம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் சித்திதான். ஹவார்ட் அரசியல் பாடம் மஹிந்த அரசைக்கவிழ்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 சரித்திர நாயகன் உலக மாவீரன் நெப்போலியன் தொடராக 40 யுத்தங்களை வென்ற போதிலும் வோட்டர்லுாவில் தோற்றுவிட்டான் என்பதை ஜனாதிபதி மஹிந்த உணரத்தவறி விட்டார் போலும்.

தற்போது ரணில்- சந்திரிகா- சரத்பொன்சேகா- தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் ஓரணி திரண்டால் உங்கள் கதி என்ன ? முறியடிக்க உங்களுக்கு சக்தி உண்டா ? சந்திரிகா அம்மணி வந்தால் அமைச்சர் பௌசி- அமைச்சர் நிமல் சிறிபால சில்வா ஓடி விடுவார்கள் என்ற சேதியைதான் அறிவீர்களா ????

உங்களுக்கு புத்தி கெட்டுவிட்டது. மனப்பயம் அதிகரித்து விட்டது. இதுதான் உண்மை. இல்லையென்றால் விமானமொன்றை தனக்கென ஒதுக்கி பட்டுமெத்தை அமைப்பீர்களா ?????

இராணுவத்தைப் பொறுத்தவரை சரத்பொன்சேகா பக்கம்தான் என்பதால் அரசும் பொதுபலசேனாவும் குப்புறக்கவிழும் காலம் வெகுதொலைவில் இல்லையென்பதே எனது கட்டியம்.

வடமாகாண சபை நீண்ட காலம் நிலைக்கப்போவதில்லை. ஆப்பிழுத்த குரங்கின் கதைதான் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கதை. வடமாகாணத்தில் சுமார் இரண்டு இலட்சம் படை நிலைகொண்டுள்ளா். ஆளுநா் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர். நிலைமை இவ்வாறு இருக்க எவ்வாறு வட மாகாணசபை நகரும்? இது ஒரு புறம் இருக்க விடுதலைப்புலியை உருவாக்குவதில் கோத்தபாய குறியாய் இருக்கிறார்.

அரசை நோக்கி நான் விடுக்கும் சேதி என்னவென்றால் ' ஞானசார தேரர் கூறியது போல் சிங்கள இனம் சிறுபான்மையாகும் காலமும் வெகுதொலைவில் இல்லை. ஞானசார தேரருக்கு பெருக்கல் விருத்தி பற்றிய அறிவு இல்லாவிட்டாலும் அவர் கூறும் கருத்து சரியானது. தமிழ் –முஸ்லிம்-கிறிஸ்தவர் மொத்தத்தொகை 50மூ வீதமானால் சரி. தந்தை செல்வாவின் தலைவர் அஷ்ரப்பின் கனவு நிஜமாகும். ஆனால் தமிழர்களுக்கு எட்டுக்கட்சி முஸ்லிம்களுக்கு எட்டுத் திசை.

மஹிந்தவா? சந்திரிகாவா? ரணிலா? சரத்பொன்சேகாவா? என நாம் தேர்தல் வைத்தால் நிச்சயம் சந்திரிகா அம்மணிதான்.

பொதுபலசேனா லிபிய தலைவர் கடாபி போன்று பொம்பளப்பொறுக்கி வேஷம் புண்டுள்ளது. இது இன முறுகலை ஏற்படுத்தி எமது முஸ்லிம் சகோதரிகளின் கற்பை சூறையாடவே. இந்த நிலைமையை சமாளித்து  இந்த நினைப்பை முறியடிக்க வேண்டுமானால் நீங்கள் எத்தனை கட்சி நடத்தினாலும் எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஒரு குடையில் திரண்டு அரசை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் வெளியேற மாட்டீர்கள். ஏனெனில் உங்களை ஆசன மோகினி விடமாட்டாள். இது சமூகத்துக்கும் நாட்காலிக்குமான போராட்டம். ஜெயிப்பது நாட்காலிதான். ஜனாதிபதி மஹிந்தவுக்குள்ள பாரிய தலையிடி சந்திரிகாதான். தற்போது  சந்திரிகா தலைமையிலான ஒரு கூட்டணி மூலமே அரசை வீட்டுக்கு அனுப்ப முடியும். மஹிந்த அரசில் உள்ள முக்கிய அமைச்சுப் புள்ளிகள் சந்திரிகாவுக்கு மிகமிக நெருக்கமானவர்கள். எனவேதான் சந்திரிகாவின் அணுவளவான அசைவும் கண்காணிக்கப்படுகின்றது. 

முக்கிய விடயத்துக்கு வருவோம். ஞானசார தேரரை சூழ்ந்திருப்பது பெண்மோகமா ? மத மேகமா ?. அப்போதுதான் சரியான மாத்திரை கொடுக்க முடியும். பஸ்களில் பயணிக்கும் போது பிக்கு மார்களுக்கு அருகில் பெண்கள் உட்காருவதில்லை. அப்படியிருக்க பெண்களுடன் கும்மாளம் அடிப்பது என்பதுதான் ஆச்சரியமான கேள்வி. மதவெறி என்றால் அதை பௌத்தபீடம் முறியடிக்க வேண்டும். அண்மையில் அகப்பட்ட பௌத்த பிக்குக்கு பௌத்த தலைமைப்பீடம் கூறியது என்னவெனில் 'காவி உடையைக்கழற்றி விட்டு புத்த வேஷத்திலிருந்து வெளியேறலாம்'. ஞானசேர தேரரை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் ஒப்படைத்தால் சரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று.

மஹிந்த ராஜபக்ஸக்குள்ள அடுத்த மனப்பயம் என்னவெனில் ரணில் அமெரிக்காவில் இருந்து 'அரபு வசந்தத்துடன் திரும்புவாரா' ? என்பதுதான். நிச்சயமாக சிங்கள மக்களை வீதிக்கு இறக்குவாரா ? 

அடுத்த ஜெனிவாக்கு முதலே ஞானசாரதேரின் மூச்சும் அரச பம்பரத்தின்  ஆட்டமும் நின்றுவிடும் என்பதே எனது கருத்துக்கணிப்பு. 

தட்டிக்கேட்க ஆளிள்ளா விட்டால் தம்பி சண்டைப்பிரண்டன் என்பதுதான் பொதுப்பலசேனாவின் இன்றைய நிலை. ரணில் அமெரிக்கா சென்றது போல் ஞான தேரா் மியான்மார் போனார். அங்கு முஸ்லிம்களுக்கு குழிதோண்டுவது எப்படி என்பதைக் கற்கவே போனார். இப்போது கற்ற வித்தை காட்டுகின்றார். இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் செரோன் பலஸ்தீன முஸ்லிம்களுக்கு கொடுத்த சொல்லொன்னாத் துயரத்தின் எதிரொலிதான் அவரது 8 வருட கோமாநிலை. இதேபோன்று இந்த ஞானசார தேரர் ஒரு நாள் கோமாவில் விழுவார். 

மொத்த முஸ்லிம் அரசியல் வாதிகளில் 75மூ ஆனவர்கள் குள்ளநரிக்கூட்டம் என்பதை எல்லா முஸ்லிம் சகோதரர்களும் அடிக்கடி  நினைவுபடுத்த வேண்டிய விடயம். உங்கள் முதுகில்சவாரி செய்பவர்கள். மர்ஹீம் அமைச்சர் அஷ்ரப்பின் தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட பிரச்சினை நமக்கு அப்பாற்பட்டது. இம் மாமனிதர் முஸ்லிம் சமூகத்திற்காக தன்உயிரைத் துச்சமாக மதித்து தியாகம் செய்தார். ஆனால் உயிருக்கு பயந்த கோழையான கருணாஇ பிரபாகரன் எங்கிருந்தாலும் தன்னைக் கொன்று விடுவான் என்ற அச்சத்தினால் பிரபாகரனைக்காட்டிக் கொடுத்தான். கிழக்கு முஸ்லிம்களை சுட்டுக்குவித்தான்.

  முஸ்லிம்கள் வில்பத்தில் வாழ்ந்தால் என்ன! சிங்கராஜாவில் வாழ்ந்தால் என்ன !!  நமக்கென்ன என்ற போக்கில் நாம் வாழப்போவதில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் - எழுத்துமடல் வரைவோம்-அரபுப்பத்திரிகைகளில் கட்டம் கட்டுவோம். குரலெழுப்புவோம். பணத்தை எறிவோம். இதுதான் உண்மைமூமின் என்பதற்கு அடையாளம்.

ஜெனிவா முற்றத்தில் தமிழ் மக்கள் கூக்குரல் இடுவது சரிதான். ஒரு சின்ன விடயத்தையும் ஊதிப்பெருப்பிக்கும் தொழில்நுட்பம் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். சிறுமி விபுசிகாவின் விடயத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

அண்மையில் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ் எம்.பி. வீரபாண்டிய கட்டைபொம்மன் போன்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து பாடினார். முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு குறைந்த பட்சம் போதுபல சேனாவை இகழ்பாடச் துணிச்சல் உண்டா ? வடமாகாண உறுப்பினர் ஆனந்தி அம்மாவுக்கு உள்ள துணிச்சல் கூட வெட்கம் கெட்ட முஸ்லிம் தலைவர்களுக்கு இல்லை. முஸ்லிம் நாடுகளை திசை திருப்பியவர்களும் இந்த பயந்தான் கொள்ளிகள்தான். அமைச்சர் ரவுப் ஹக்கீம் பங்களாதேசுக்குப் போனதைப் பார்த்தீங்களா ? எள்ளுகாயுதென்று எலிப்புடுக்கும் காய்ந்த கதையைப் படித்தீர்களா ? இந்த ஹக்கீம் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. அது மட்டுமல்ல பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ஒரு வேஷக்காரன். நீங்கள் ஐ.நா. ஆணையாளரிடம் நீட்டிய கடிதம் போலி என்பதை பங்களாதேஷ் 20-20 கொண்டாட்டம் தத்ரூபமாய்ப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்த ரவுப்ஹக்கீம் நவநீதம் பிள்ளையிடம் நீட்டிய கடிதத்தில் காரமோஇவன்அமிலமோ-உப்புச்சப்பு எதுவும் கிடையாது. இவர் நீதி அமைச்சராக இருந்து கொண்டு இதைச்செய்ய மாட்டார் என்பது உங்கள் மூளைக்குப் பொறிப்பட்டதா ?????? ( இவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கண்சிமிட்டி விட்டுத்தான் இந்தக்கடிதத்தை வழங்கினார்.)

முஸ்லிம்களின் நெஞ்சம் புண்ணாகிக் கொண்டும் பள்ளிவாவல்கள் எரிந்த வண்ணமும் இருக்கின்றன. இந்நிலையில் நீங்கள் 'டாக்கா' சென்று 'காக்கா' பிடிக்கிறீர்கள். பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுகிறீா்கள். பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை. உண்மை எப்போதும் துாங்குவதில்லை. மஹிந்த ஐயா ! 

ஹவார்ட் பல்கலைக்கழகத்துக்கே பாடம் கற்றுக்கொடுக்க முடியுமென்றால் பொதுப்பலசேனாவைக் கவிழ்க்க எமக்கு ஒரு மந்திரம் சொல்லுங்கள் ஐயரே.!!!

அன்று ஈராக் அதிபர் சதாமை சிறைப்படுத்தியவர்கள் ஜோர்ஜ் புஷ். அதேவேளை சதாமுக்கு சிறையில் ஒத்தாசையும் பல சலுகைகளும் வழங்கியதும் ஒரு அமெரிக்க தளபதிதான். அதேபோன்றே டிலான் பெரேரா –வாசுதேவ நாணயக்கார – விஜித தேரர் போன்றோர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதால் சிங்கள மக்களை நேசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மஹிந்த ஐயா ! உங்களுக்கும் பொதுப்பல சேனாவின் நோய் தொற்றிவிட்டது என்றுதான் நினைக்கின்றேன்.ஒரு மனிதனுக்கு பதவி வெறி- பண வெறி முற்றும் போது அவன் என்ன செய்கின்றான் என்பது அவனுக்குத் தெரியாது. 

3 comments:

  1. பொது பல சேனவை அடக்க முடியாமல் இல்லை அதை செயற்படுத்திக்கொண்டிருப்பதே அரசாங்கம்தானே. தருணம் வரும்போது. நிறுத்துவோம். தேவையான விடயங்களுக்கு பாவிக்கின்றோம்.

    மொத்தத்தில் எமது அரச நோக்குக்காக பாவிக்கின்றோம் என்றுதானே மறைமுகமாக சொல்லுகின்றோம் உமக்கு புரியவில்லையா? ? ?

    ReplyDelete
  2. Sister Rizana Basheer, Please do'nt get angry with Our President Mahinda who is treating the muslim community as slaves under 'Mahinda sinthanaya' of bothubala sena exteamist group and his brother blind kothabaya (Secret forces) in Sri Lanka.Many many people are working out against to the muslim community in the back ground such as Sarath Ponsega, Sinhala ravaya,Helaurumaya and many other racists with a Lady Lawyer, It is a challenge for us to utilize the peace. but Where are are our Muslim Politicians who are wearing the neck tie and nice Suit?
    what are they doing with the white (dresscode of ) President?? Gem of genltmen ! Please Let us know what are you ll doing with the government in this regard???

    ReplyDelete
  3. Sister Rizana Basheer, Please do'nt get angry with Our President Mahinda who is treating the muslim community as slaves under 'Mahinda sinthanaya' of bothubala sena exteamist group and his brother blind kothabaya (Secret forces) in Sri Lanka.Many many people are working out against the muslim in the back ground such as Sarath Ponsega, Sinhala ravaya,Helaurumaya and many other racists with a Lady Lawyer, It is a challenge for us to utilize the peace. but Where are our Muslim Politicians who are wearing the neck tie and nice suits? what are they doing with the President?? Gem of genltmen! Please Let us know what are you ll doing with the government in this regard??? you All happy with this activities in Sri Lanka???

    ReplyDelete

Powered by Blogger.