Header Ads



நவநீதம்பிள்ளைக்கு அறிக்கை வழங்கியது தவறு இல்லை - ரவூப் ஹக்கீம்

நாட்டின் நல்லிணக்கம் தொடர்பில், தாம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் வழங்கிய அறிக்கை சரியானதே என்று இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் மல்வத்த மகாநாயக்கரை இன்று சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துரைத்த அமைச்சர் ஹக்கீம், நவநீதம்பிள்ளைக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கையின் அமைச்சரவையும் அங்கீகரித்துள்ளது.

எனவே அது தொடர்பில் தாம் நவநீதம்பிள்ளையிடம் அறிக்கை கையளித்தமை தவறாகாது என்று ஹக்கீம் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ஒருதடவை நல்லிணக்க பரிந்துரை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளமையை ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.


No comments

Powered by Blogger.