Header Ads



பொதுபல சேனாவை நோக்கி பாயும் அமைச்சர் டிலான் பெரேரா..!


(அஸ்ரப். ஏ. சமத்) 

இந்த பொதுபலசேனாவை வாலை நருக்கி மட்டுமல்லாமல் தலையில் தேசிக்காய் வைத்து இரண்டாகவும் பிளக்கும் அளவுக்கு வெட்டி ஓட ஓட விரட்டுவேன். அமைச்சர் திலாண் பெரேரா இன்று 20-04-2014 பதுளையில் தெரிவிப்பு.

இன்று பதுளையில் நடைபெற்ற புதுவருட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து    கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் திலான் பெரெரா கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

முடியுமானால் இன்று பதுளை விளையாட்டு மைதாணத்தில் நடைபெறும் இந்த தமிழ் சிங்கள முஸ்லீம் இனங்களின் இன ஜக்கியத்தை இந்த சேனாக்கள்  வந்து பாக்கவும். அல்லது இனத் துவேசத்தை  கிளப்புவதற்கு  இங்கு வந்தால் வாலை நருக்கி ஓட ஓட விரட்டுவேன். அதுமட்டுமல்ல தலையில் தேசிக்காய் வைத்து இரண்டாக பிளக்கும் அளவுக்கு அவர்களுக்கு வைத்தியம் பாhப்பேன்.

இந்த பலசேனா வெளிநாட்டு ஈயுரோக்களுக்கும் டொலர்களுக்கும் இந்த நாட்டில் இன ஜக்கியத்தை குழப்பி இந்த நாட்டினை வெளிநாட்டு குமந்தரவாதிகளுக்கு காட்டி கொடுக்கும் வேலையை செய்கின்றனர். அத்துடன் பௌத்த மதத்தினை வைத்து இனவாதத்தை கிளப்பி வெளிநாட்டில் வரும் பணத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கின்றார்கள். இந்த திலான் இருக்குமட்டும் இது ஒரு காலம் நடக்காது நடக்கவிடமாட்டேன். எனவும் திலான தனது உரையில் பொதுபலசேனா பற்றி உரையாற்றினார்.

1 comment:

  1. Yes... mr.dilan perara you are almost welcome but our Muslims ministers waste but you know one thing who is making a bbs???? People they know very well that our government. If the government they are not make the solutions why until now no any action for bbs the government only showing as a re action. ...

    ReplyDelete

Powered by Blogger.