Header Ads



சோறு சாப்பிடுவதை நிறுத்தினாலும் போதைப் பொருள் பாவனையை நிறுத்த முடியாதவர்களாக உள்ளனர்

நாட்டில் இன்றுள்ள சில நபர்கள் சோறு சாப்பிடுவதை நிறுத்தினாலும் போதைப் பொருள் பாவனையை நிறுத்த முடியாதவர்களாக இருப்பதாக அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் மாநாயக்கரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

போதைப் பொருள் பரவலை தடுப்பது சிரமமாகியுள்ளது. சிலர் தேசிய ரீதியாக போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போதைப் பொருள் கலந்து வெற்றிலை, பாக்குகளையும் கொண்டு வருகின்றனர்.

கிராமங்களிலுள்ள மூத்தவர்கள் சோறு சாப்பிடுவதை விட வெற்றிலை பாக்கை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். வெற்றிலை பாக்குடன் கலந்து பயன்படுத்து சுண்ணாம்பு மற்றும் புகையிலை தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது கட்டாயம் என மாநாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.