Header Ads



அக்குறணையில் நகரில் மாடி வீட்டில் தீ விபத்து (படங்கள் இணைப்பு)

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரில் இரு மாடி வீடு ஒன்றின் மேல் மாடியில் இன்று 2014 02 03 மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவ் வீட்டின் மேல் மாடி முற்றாக தீபற்றியுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

கண்டி மாநகர சபையின் தீ அனைப்புப் பிரிவினர் அக்குறணை பிரதேச செயலகம் மற்றும் அலவத்துகொடை பொலீஸார் பிரதேச மக்களுடன் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த போதும் வீட்டின் மேல் மாடி முற்றகாக தீயினால் சேதமடைந்துள்ளது. 

இத் தீயினால் ஏற்பட்ட நஷ்டத்தையும் தீக்கான காரணத்தையும் கண்டறியவற்காக அலவத்துகொடை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.






No comments

Powered by Blogger.