தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு மன நோயாளி - அமைச்சர் எஸ்.பி.யின் கண்டுபிடிப்பு
(எம். எஸ். பாஹிம்)
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஒரு மனநோயாளி எனவும் அதனாலே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருவதாகவும் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க கூறினார்.
ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயற்பாடுகள் குறித்தும் இலங்கை தொடர்பில் அவர் கூறிவரும் கருத்துக்கள் குறித்தும் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், அவருக்கு மனநல குறைபாட்டு பிரச்சினையுள்ளது.
அதனாலே பைத்தியக்காரத்தனமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கச்சதீவு தொடர்பில் எதுவித முடிவும் எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசாங்கமே அது தொடர்பில் தீர்மானிக்கும். கச்சதீவு எமக்கு உரிய இடமாகும்.
முன்பு பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் எதிராக குரல்கொடுத்த அவர் இன்று புலிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறார். ரஜீவ் காந்தியை கொலை செய்த கொலையாளிகளை விடுதலை செய்ய ஜெயலலிதா முயற்சிக்கிறார். ஆனால் அதற்கு இந்திய மத்திய அரசாங்கம் முடிவு கட்டியுள்ளது என்றார்.

Post a Comment