ஹையான் புயல் தாக்க, வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட பெண் குழந்தை பெற்றார் (வீடியோ)
பிலிப்பைன்ஸ் நாட்டின் சமர், லிஸ்தே தீவுகளை ஹையான் என்ற புயல் தாக்கியது. இதில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட எமிலி ஒரிடிகா(21) நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி வரவே, இந்த புயல் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து அலங்கோலமான நிலையில் கிடந்த விமான நிலையத்தில் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
காணொளி
இந்த புயலில் காணாமல் போன பத்தாயிரத்திற்கும் அதிகமானோரில் எமிலி ஒரிடிகாவின் தாயாரும் ஒருவர், பிறந்த அந்த குழந்தைக்கு '(Beatriz Joy Sagales) பேட்ரிஜ் ஜாய் சாகல்ஸ்' என்ற ஓரிடிகாவின் தாயரின் பெயர் இடப்படுள்ளது.

Post a Comment