சவூதி அரேபியாவிலிருந்து 40 க்கும் அதிகமான இலஙகையர்கள் நாடுகடத்தல்
சவுதியில் சட்ட விரோதமான முறையில் தங்கி இருந்து தொழில் புரிந்து வந்த 40க்கும் அதிகமான இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர். Arab News இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அவர்களை நாடுகடத்துவதற்கான உத்தரவுகளும், வெளியேற்றல் வீசாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு சட்டங்களை மீறி அங்கு தங்கி இருந்த இலங்கையர்கள், அங்கிருந்து வெளியேறுவதற்காக சவுதி அரசாங்கம் பொது மன்னிப்பு காலத்தை வழங்கி இருந்தது. இந்த காலப்பகுதிக்குள் அங்கிருந்து வெளியேறாதவர்கள இவ்வாறு கட்டம் கட்டமாக நாடுகடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment