Header Ads



அம்பாறை நெற்காணிகளில், பாசிப்பயருச் செய்கை வெற்றியளிப்பு (படங்கள்)


(யு.எல்.எம். றியாஸ்)

அம்பாறை மாவட்டத்தில் நெற்காணிகளில் செய்கை பண்ணப்பட்ட பாசிப்பயருச் செய்கை வெற்றியளித்துள்ளது. மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சின் தொழில் நுட்ப அனுசரணையுடன் செய்கை பண்ணப்பட்ட இப் பாசிப்பயருச் செய்கை வெற்றி
அளித்துள்ளதுடன் சிறந்த அறுவடையும் கிடைக்கப்பெற்றுள்ளது

அட்டப்பள்ளம் மாட்டுப்பளை பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா நேற்று  (29.10.2013) நிந்தவூர் பிரதேச விவசாய போதனாசிரியர் எஸ்.எச் ஏ.நிஹார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்,எஸ்,ஏ, கலீஸ்,நிந்தவூர் பிரதேச செயலார் ரிபா உம்மா ஜெலீல்,அட்டாளைச்சனை உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் மற்றும் விவசாயத்திணைக்கள உத்தியிகத்தர்கள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



No comments

Powered by Blogger.