Header Ads



வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதி

வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று மதியம் யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்றுகாலை அமெரிக்க மற்றும் கொரியத் தூதுவர்களை சந்தித்த பின்னர், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு இலேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்தே பிற்பகல் 1 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

முதல்வர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், 24 மணித்தியாலங்கள் அவரைக் கண்காணித்து, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே தொடர்ந்தும் அவர் மருத்துவமனையில் தங்கியுள்ளதாகவும் யாழ்.மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.