பயங்கரவாதம் + போதைப் பொருளை கட்டுப்படுத்த 2 பிரிவுகள் - கோத்தா ஆரம்பித்துவைத்தார்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
சார்க் நாடுகளுக்கிடையேயான பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை ஒன்றிணைந்து கட்டுப்படுத்தும் வகையில் தனித்தனியாக இரண்டு பிரிவுகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகத்தில் இன்று 24-10-2013 வியாழக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இவ்விரு பிரிவுகளையும் திறந்து வைத்தபின் அதனை பார்வையிடுவதைப் படத்தில் காணலாம். சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் நந்தா மல்லவராச்சி, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் மற்றும் சார்க் நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.




Post a Comment