Header Ads



மேர்வின் சில்வா நாய்களை திருமணம் செய்யலாம்..!

திருமண ஆசை இருந்தால் மேர்வின் சில்வா பெட்டை நாய்களை திருமணம் செய்யலாம். மேர்வின் சில்வாவுக்கு திருமண ஆசை இருந்தால் கண்டிக்கு சென்று பெட்டை நாய்களை திருமணம் செய்து கொள்ளலாம் என ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மைகள் கண்டியில் பொலிஸார் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். மேர்வின் சில்வாவுக்கும் திருமண ஆசை ஏற்பட்டால் உடனடியாக கண்டி பொலிஸாருடன் தொடர்பு கொண்டு மோப்ப நாய் ஒன்றை திருமணம் செய்து கொள்ளலாம். அது தான் அவருக்கு பொருத்தம் என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தாம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து இராஜதந்திர மட்டத்தில் பிரச்சினைகளை உருவாக்கி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, மேவின் சில்வாவுக்காக நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பை கோரியிருந்தார்.

இந்தநிலையில் கண்டி பொலிஸாரே மோப்ப நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர் என்று கூறியுள்ள ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, பொறுப்பற்ற அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு திருமணம் ஆசை ஏற்பட்டால் கட்டாயம் கண்டி பொலிஸுக்கு செல்லுமாறு கோரியுள்ளார். அங்கு அவருக்குரிய மணமகள் இருக்கலாம் என்று டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். gtn

5 comments:

  1. "பாம்பின் காலை பாம்பறியும்" என்பார்கள்.

    அதற்கிணங்க சில்வா வின் பிரச்சினையை சில்வாவே அறிவார்.

    (மேவின் சில்வா வை டில்வின் சில்வா நன்கறிந்துள்ளார் போலும்)

    ReplyDelete
  2. மேர்வின் சில்வா எனும் எங்கள் நாட்டு கோமாளி அமைச்சருக்கு இருக்கும் சொறி நோய்க்கு மிக சிறந்த பதில் :)
    (

    ReplyDelete
  3. சரிதான் மக்கள் தொடர்பாடல் அமைச்சரான M.சில்வா, மக்களின் குற்றங்களை மோப்பம் பிடிக்கும் நாய்களை திருமணம் செய்வதுதான் சரியான தீர்வு, எதற்கும் இவரின் ஜாதகம் பொலிஸ் நாயின் ஜாதகத்துடன் பொருந்துதா என்றும் பார்க்கவேண்டும். இல்லையென்றால் நாயின் பாடும் அதோ கெதிதான்

    ReplyDelete
  4. angodai aaspaththirikku pakkaththil ulla naaikal mikapporuththam. abhimaani

    ReplyDelete

Powered by Blogger.