Header Ads



துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பு..!

துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும். ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. அந்த பத்து இரவுகள் மீது ஆணையாக (அல்குர்ஆன்:89:2) என்று வல்ல அல்லாஹ் அல்குர்ஆனில் சத்தியம் செய்கின்றான்

இங்கு பத்து இரவுகள் என்று கூறப்படுவது துல்ஹஜ் முதல் பத்து இரவுகள்தான் என்றே அணைத்து அறிஞர்களும் முடிவு செய்துள்ளார்கள். இம்மாதத்தின் முதல் பத்து நாட்களும் ஏனைய அனைத்து நாட்களையும் விட அதிசிறப்பு வாய்ந்ததாகும். இது பற்றி நபி (sal) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

ஆதத்துடைய சந்ததியினர் நல் அமற்கள் செய்யும் நாட்களிலலெல்லாம் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்கள் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று  நபி (sal) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான்,  என்றாலுல் யார் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும், உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தாரோ அவரைத் தவிர என்று நபி (sal) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி

இந்த நாட்கள் ஏனைய நாட்களைவிட சிறப்புறுவதற்கு காரணம் ஏனைய காலங்களில் ஒன்று சேர முடியாத நல் அமற்களாகிய இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை,  நோன்பு,  ஜக்காத்,  ஹஜ்,  போன்ற அணைத்து நல் அமற்களும் இந்த நாட்களில் ஒன்று சேர்ந்து காணப் படுகின்றன. மற்றகாலங்களில் ஒரு மனிதன் அணைத்து கடமைகளையும் செய்த போதிலும் ஹஜ் கடமை இந்த நாட்களைத்தவிர வேறு நாட்களில் செய்ய முடியாது. எனவே இந்த நாட்களில்தான் அணைத்து அமற்களையும் செய்ய முடியும்.

இந்த நாட்களில் செய்ய வேண்டிய நல் அமற்கள்.

ஹஜ்-உம்ரா செய்தல் 

ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும், மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என நபி(sal)  அவர்கள் கூறினார்கள்.    நூல்: புகாரி, முஸ்லிம்

அதிகமதிகமாக நபிலான தொழுகைகளைத் தொழுதல், அதிகமாக நபிலான நோன்புகள் நோற்றல், குறிப்பாக அரபாவுடைய நாளன்று நோன்பு நோற்றல்.

நபி (sal)  அவர்கள் கூறினார்கள்:
அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பவருக்கு அந்த நாளுக்கு முந்திய ஒரு வருடத்தின் பாவங்களையும், அதற்கு பின் வரக்கூடிய ஒரு வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன். நூல்:முஸ்லிம்

நன்மையை ஏவுதலும்,  தீமையை தடுத்தலும், அதிகமதிகமாக தர்மங்கள் செய்தல், அதிகமதிமாக உறவினர்களுக்கு உதவி உபகாரம் செய்தல், அதிகமாக குர்ஆனை ஓதுதல்,  பாவமன்னிப்பு தேடுதல், அதிகமதிகமாக அல்லாஹ்வை திக்ர் செய்தல்  போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே அன்றைய தினம் லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (sal) அவர்கள் கூறினார்கள்.        ( நூல்; : அஹ்மத்)

அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்க்கக்கூடாது, ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் ஏற்றமானது. துல் ஹஜ் பிறை ஒன்றிலிருந்த பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரை கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும், பள்ளிவாசல், வீடு, கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது, விஷேடமாக அரஃபா நாளின் ஸப்ஹ தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல்;.

இப்னு உமர்   அபூஹரைரா ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் மாதம் ஆரம்ப பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள், இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.        (நூல்:புகாரி)

தக்பீரின் முறை

الله أكبر الله أكبر الله أكبرلااله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹ{ அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் வலில்லாஹில் ஹம்து. இதுவே ஹதீஸில் வந்துள்ள சுன்னத்தான தக்பீராகும். இன்று எமது வழக்கில் உள்ள முறை ஹதீஸில் இல்லாத போதும் அது தவறில்லை எனக்கருதுகின்றேன்.

ஹஜ் பெருநாள் தொழுகை, இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது. உழ்ஹிய்யா அதாவது குர்பான் கொடுப்பது 

உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும்ää இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும். கொம்புள்ள, கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி(sal) அவர்கள் உழ்ஹிய்யா கொடுத்தார்கள், அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹ அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.  நூல்: புகாரி

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்;

ஆடு. மாடு, ஒட்டகம்     (புகாரி)
ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும்  (திர்மிதி)
மாட்டிலும், ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம். (திர்மிதி)

உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது
கண் குறுடு, கடுமையான நோயானவை, மிகவும் மெலிந்தவை, நொண்டியானவை  அங்கங்கள் குறையுள்ளவை.

நேரம்

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்,

யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது, அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.

யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி(sal) அவர்கள் கூறினார்கள்.         ஆதாரம் - புகாரி, முஸ்லிம் யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி(sal) அவர்கள் கூறினார்கள்.  (புகாரி, முஸ்லிம்)

உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை

உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ, தோல்களையோ,மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது. குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி(sal) அவர்கள் நியமித்தார்கள், அவைகளின் மாமிசம், தோல், ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும், அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள், அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ral) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  ஆதாரம்:- புகாரிääமுஸ்லிம்

உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்

துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (sal) அவர்கள் தடைசெய்தார்கள்.  ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- 
இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவர்களுக்கு மாத்திரம்தான், அவரின் குடும்பத்தினருக்கு அல்ல. 

அறுக்கும் முறை - ஆடு, மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும்,  (முஸ்லிம்) ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்) அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹ அக்பர் என்று கூற வேண்டும்.  (புகாரி)

No comments

Powered by Blogger.