மெய்ஞ்ஞானக் காதலர்கள் நூலின் வெளியீட்டு விழா
(
ஏ.ஜி.ஏ.கபூர்)
ஆன்மிக எழுத்தாளரான அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அல்-ஹாஜ் ஏ.றபியுத்தீன் (ஜமாலி) எழுதிய மெய்ஞ்ஞானக் காதலர்கள்என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று (16.08.2013) வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு அக்கரைப்பற்று நகர்ப்பள்ளி வாயல் அருகாமையில் விசாயத்திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சிப் பணிப்பாளர் வை.பி.இக்பால் (எம்.பில்.) தலைமையில் நடைபெற்றது. கௌரவ அதிதியும், பிரதம பேச்சாளருமான கட்டார் பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியர் கலாநிதி தீன்முஹம்மத் உரையாற்றுவதையும்; நூலாசிரியர் மௌலவி அல்-ஹாஜ்.ஏ.றபியுத்தீன் (ஜமாலி), பிரதம அதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் (எம்எஸ்ஸி), கட்டார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் கலாநிதி ஏ.பி.மஃறூப், சிரேஸ்ட சட்டத்தரணி கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோர் அருகில் அமர்ந்திருப்பதையும்,,நூலின் முதலாவது பிரதியை நூலாசிரியர் ஏ.றபியுதீன் ஜமாலி, உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயிலுக்கு வழங்குவதையும் படங்களில் காணலாம்.


Post a Comment