இலங்கையர்கள் எரிகல் விழுவதை காணலாம்
நாளை முதல் மூன்று நாட்களுக்கு பர்சீட் எனப்படும் எரிகல் பொழிவை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிட்டவுள்ளது.
இதில் எதிர்வரும் 13ஆம் திகதி ஒரு மணித்தியாலத்திற்குள் சுமார் 50 எரிகற்களை காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வானம் தெளிவாக இருந்தால் நள்ளிரவு தொடக்கம் அதிகாலை வரை வடகீழ் வான் பரப்பில் பர்சீட் எரிகல் பொழிவை காண முடியும் என கலாநிதி காவன் ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment