கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலில் கொலையாளிகளுக்கு தொடர்பு - மங்கள
(Adt)வெலிவேரியாவில் ராஜபக்ஷ தீவிரவாதத்தை செயற்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இருந்து சிலர் தெரிவு செய்யப்பட்டிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ராஜபக்ஷ தீவிரவாதத்திற்கு அடிப்பணியாது சீருடையின் கௌரவத்தை பாதுகாக்குமாறு இராணுவத்தினரிடம் மங்கள சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
´இன்று நாடு முழுவதும் ராஜபக்ஷ தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. நூற்றுக்கு 80 சதவீதம் அது செயற்படுகிறது.
உலகில் அதிக பாலியல் வல்லுறவு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் எமது நாட்டிலேயே நடக்கிறது. நாள் ஒன்றிற்கு 7 பாலியல் வல்லுறவும் 3 சிறுவர் துஷ்பிரயோகமும் இடம்பெறுகிறது.
யுத்த சட்டத்திற்கு அமைவாக விகாரைகள், கோவில்கள், பள்ளிகள் மீது தாக்குதல் நடாத்துவது தவறு என்ற போதும் பிரதி பொலிஸ் மா அதிபர் கிரான்ட்பாஸ் சென்று பள்ளியை மூடி வைக்கவும் இல்லாவிட்டால் தாக்குவார்கள் என்று கூறியுள்ளார். ஜனநாயக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட குழுவினருக்கு எதிராக இவரே பீ அறிக்கை தயாரித்து வருகிறார்.
வெலிவேரியாவில் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும். பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த கட்டளையிட்டது யார் என கண்டறிய வேண்டும்.
ராஜபக்ஷ தீவிரவாதம் முழு நாட்டுக்கும் கேடாக அமைந்துள்ளது. விளையாட்டில் தோல்வி ஏற்படும்போது ராஜபக்ஷ புதல்வர்கள் நடுவர்களை தாக்குகின்றனர். அதுபோன்று ராஜபக்ஷவின் உள்ளூர் தலைவர்களின் மகன்மார் பாடசாலை அதிபர்களை தாக்குகின்றனர்.
ஆசிரியர்களை முழந்தாழிட வைத்து, அரச ஊழியர்களை மரத்தில் கட்டி ராஜபக்ஷ தீவிரவாதம் வளர்க்கப்படும் விதத்தை நாளாந்தம் கேட்க, காண முடிகிறது.
அண்மையில் கிரான்ட்பாஸ் மசூதி மீது பாதுகாப்பு அமைச்சு மற்றும் வீரவன்சக்களின் வழிகாட்டலில் செயற்படும் ´பழு சேனா´ (நாய்படை) தாக்கிய போது வாய் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ராஜபக்ஷ தீவிரவாதத்திற்கு உள்பந்தம் பிடிக்கும் சில பொலிஸார் ஆவர்.
கிரான்ட்பாஸ் தாக்குதல் சம்பவத்தில் அப்பிரதேச ஜாதிக ஹெல உறுமய உபாலி, தினேஸ், ஞானே, விஜே, பியதிஸ்ஸ ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அரசாங்கத்தின் கொலையாளிகள் இருந்ததாக பொலிஸ் அறிக்கையில் தெரியவருகிறது.
ஆனால் இவர்களை பொலிஸுக்கு அழைக்கவில்லை. வாக்குமூலம் பெறப்படவில்லை.´
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
.jpg)
Thank you sir for disclosing some serious facts regarding the Grandpass Mosque attack.
ReplyDeletedog sena nice name.suitable name for them.
ReplyDelete