Header Ads



நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்புவிழா


(Umar Ali + சுலைமான் றாபி)

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்திறப்புவிழா இன்று 29 06 2013 ஆம் திகதி காலை 10 மணிக்கு பிரதேச செயலாளர் ஹாஜியானி திருமதி ரிபா ஜலீல் அவர்களது தலைமையில்  நடைபெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள்  அமைச்சர்  WDJ செனெவிரெட்னெ அவர்கள் கலந்து  கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் பைசால் காசிம் ,திருமதி சிரியாணி,மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பை,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசனயாக ,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் L D  அல்விஸ்  மற்றும் அம்பாறை மாவட்ட உதவியாரசாங்க அதிபர்களும்,நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ,பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிந்தவூர் பிரதேசமானது கிட்டத்தட்ட 31000 மக்கள் தொகையையும்,25 கிராம சேவகர்  பிரிவுகளையும் கொண்ட ஒரு புராதன கிராமமாகும் இங்கு நெற்செய்கையும்,மீன்பிடியுமே பிரதான தொழில்களாக காணப்படுகின்றன .நவீன முறையில் வடிமக்கப்பட்டு சுமார் 45 மில்லியன் ரூபா செலவில் நிருமாநிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தொகுதிபயன்பாட்டுக்கு வருவதிலிருந்து  இட நெருக்கடியால் இதுவரை காலமும் சேவை வழங்குவதில்  ஏற்பட்ட இடர்பாடுகள் நீக்காபட்டிருப்பதால் மக்களுக்கு சிறந்த சேவை  எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் என்று இந்நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.