ஹலால் முஸ்லிம்களின் உரிமை, அதனால் எமக்கு எக்கெடுதலும் ஏற்படாது - பிரதமர்
(அஸ்ரப்.ஏ.சமத் + ஜாவித்)
இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு வந்தவர்கள். இந்த நாட்டினை ஆக்கிரமிக்க வந்த வெளிநாட்டவர்களான போத்துக்கேயருக்கு எதிராக கண்டி மண்ணர்களது சிங்கள படைகளுடன் இணைந்து யுத்தம் செய்த வரலாறும் இந்த நாட்டின் வாழும் முஸ்லீம்களுக்கு உண்டு. அது மட்டுமல்ல அவர்கள் சிங்கள அரசர்களுக்கு மருத்துவம் செய்து அவர்களது நோய்களை குணப்படுத்திய வரலாறும் உண்டு. அதற்காகவே முஸ்லீம்களுக்காக அன்றைய மண்ணர்கள் கண்டி கம்பளை போன்ற இடங்களில் பள்ளிவாசல் நிர்மாணித்து அவர்களுக்கு வாழ்வதற்கு இடம் வழங்கியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச குர்ஆண் மனனப்போட்டியில் 83 நாடுகளுடன் போட்டியிட்டு முதலிடத்தை பெற்ற ஹாபீஸ் எம். ஆர்.எம். றிஸ்கானுக்கு பிரதம மந்திரி தி.மு. ஜயரத்தின அவர்களினால் பாராட்டி கௌரவிக்கு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இவ் வைபவத்திலேயே பிரதம மந்திரி தி.மு.ஜயரத்தின கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடாந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது,
ஆகவேதான் இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களை பெரும்பாண்மையான நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் . அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ்வதற்கு தமது மத அனுஸ்டானம் போன்ற சகல உரிமைகளும் அனுபவிப்பதற்கு உரிமையுண்டு. நான் கம்பளை மாணவல்லை போன்ற இடங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் வந்தபோது நான் தணியே நின்று அவர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் வராமல் பாதுகத்தேன். கம்பளையில் இன்றும் முதியான்சலாகே இப்றாலெப்பை என்ற அரபு வைத்தியர்கள் பரம்பரையில் உள்ளனர். கம்பளை கண்டி போன்ற இடங்களில் சிங்கள மக்கள் என்றும் முஸ்லீம் கடைகளுக்கு சென்று பொருள்வாங்குவோம். அவர்கள் நம்பிக்கையாக நேர்மையாக வியாபாரம் செய்பவர்கள். ஹலால் என்பது அவர்களுக்கு உள்ள உரிமை அதனால் எமக்கு எவ்வித கெடுதலும் ஏற்படாது நான் கம்பளை சாஹிராக்கல்லூரியில் கற்றேன். எனக்கு நிறைய முஸ்லீம் நண்பர்கள் உள்ளனர்.
மாணவன் றிஸ்கான் அரபு உலோக நாடுகளுடன் குர்ஆண் மனனப் போட்டியில் போட்டியிட்டு முதலிடத்தை பெற்றிருப்பது இந்த நாட்டின் உள்ள முஸ்லீம் இனத்துக்கு பெற்ற வெற்றிஅல்ல முழு இலக்கைக்கும் பெற்றுக்கொடுத்த வெற்றியாகும். இம் மாணவனை நான் மிக விரைவில் ஐhனதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அழைத்துச் சென்று அவரது ஆசிர்வாதத்தை பெற்றுக்கொடுப்பேன். எனவும் தி.மு.ஜயரத்தின தெரிவித்தார்.

கொரவ பிரதமரின் கருத்துக்கள் முஸ்லிம்களை பொருத்தவரை உண்மையை
ReplyDeleteஉரத்துச் சொல்லும் பாங்கு தென்படுகிறது.இலங்கையில் பண்டு தொட்டு வாழும் முஸ்லிம்களின் ஹலால் பயன்பாட்டினால் இந்த நாட்டுக்கு எந்த
கேடும் வந்து விடவில்லை என்பது தெளிவு.ஹலால் என்பது உலக மாந்தர் அணைவருக்கும் நன்மை பயக்க வல்லது என்பது விஞ்ஞான புர்வமான உண்மை.பொதுபலசேனாவுக்கும் இது தெரியாத தொன்றல்ல, ஹலால் மூலம்தம்மை ஹீரோக்களாக்கிக் கொள்வதுடன்,முஸ்லிம்களை உளவியல்ரீதியாகஅச்சுறுத்தி,யாரையோ திருப்திபடுத்த முனைகிரார்கள் என்பது தான் உண்மை.
ஹாபிஸ் ரிஸ்கான் அவர்களுடைய Youtube தொடர் இருந்தால் தரவும். கேட்டு மகிழலாம்.
ReplyDelete