Header Ads



அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஊடவியலாளர் றிப்தி அலி கௌரவிப்பு


இளம் ஊடவியலாளர் றிப்தி அலி, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் நவீன ஊடகம் தொடர்பிலான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக றிப்தி அலி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார். இதன்போதே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இளம் ஊடவியலாளர் றிப்தி அலி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்த ஊடகவியலாளர் றிப்தி அலி, ஒக்லகோம பல்கலைக்கழகத்தில் நவீன ஊடகம் தொடர்பில் மூன்று வாரங்கள் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டார். பின்னர் கலிபோனியா மற்றும் வொஷிங்டன் ஆகிய பிரதேசங்களிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட றிப்தி அலி தமிழ்மிரர் மற்றும் டெய்லிமிரர் ஆகிய ஊடகங்களில் ஊடகவியலாளராக செயற்படுகின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளர் இவர், எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போரத்தின் வருடாந்த மாநாட்டில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


3 comments:

  1. Wish you all the best

    SHM Wajith
    Musaliyan

    ReplyDelete
  2. Congratulations on your achievement and I also feel very happy as a muslim. Our society needs people like you. If you could work for our society a little beyond the politics you will be more and more appreciated by everyone.

    ReplyDelete
  3. Congratulations on your achievement and I also feel very happy as a muslim. Our society needs people like you. If you could work for our society a little beyond the politics you will be more and more appreciated by everyone.

    I wish you to take up the secretary post of muslim media forum on forthcoming Saturday 29th

    ReplyDelete

Powered by Blogger.