Header Ads



நிச்சயதார்த்தம் செய்ய சென்ற குடும்பம் குண்டுவெடிப்பில் சிக்கியது - 9 பேர் வபாத்


ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தலிபான்கள் ஆங்காங்கே தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், கந்தகார் அருகே இன்று சாலையோர குண்டு வெடித்து சிதறியதில் 8 பெண்கள் 1 குழந்தை என 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் இன்று காலை காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரம் புதைக்கப்பட்ட குண்டினை ரிமோட் மூலம் வெடிக்க செய்ததில் கார் 10 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


No comments

Powered by Blogger.