இலங்கைக்கு மியன்மார் பெளத்தகுழு செய்துள்ள அன்பளிப்பு
மியன்மார் பெளத்த தூதுக் குழுவினரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சூடாமாணிக்கத்தை வரலாற்றுப் புகழ்மிக்க மிஹிந்தலை தாதுகோபுரத்துக்கு வழங்கும் நிகழ்வூ நேற்று இடம்பெற்றது.மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோர் கையளித்தனர். இது தொடர்பில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் கங்காராமாதிபதி கலபொட ஞானதிஸ்ஸ தேரர் உட்பட முக்கிய பௌத்த மத குருக்கள் கலந்துகொண்டனர்.


Post a Comment