இறைச்சிக்கடை இராஜ தந்திரம் - முஸ்லிம்கள் மீது அடுத்த கட்ட பாய்ச்சல்
(மஸிஹுதீன் இனாமுல்லாஹ்)
இறைச்சிக் கடை விவகாரம் சூடு பிடிக்கிறது, உண்மையில் அகிம்சாவாதத்தை போதிக்கும் பௌத்த தர்மம் மாடுகளை மாத்திரமன்றி உயிரினங்கள் எதனையும் கொல்வதனை விரும்பவில்லை, ஆனால் மாமிசம் உண்ணுவதை கண்டிப்பாக தடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை.
ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, முயல்,மான் என எதனையும் மிருக வதையை எதிர்ப்பவர்கள் விரும்பமாட்டார்கள்.
பசுவதையை குறிப்பாக இந்து மதத்தினர் விரும்புவதில்லை ஏனெனில் பசுவிற்கு ஒரு புனிதமான இடத்தை வழங்கி உழவர் திருநாளில் சித்திரை புத்தாண்டில் அதற்கான விஷேடமான ஆசார தர்மங்களை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி கிறிஸ்தவர்களும் மாமிசங்களை உண்ணுகிறார்கள், சிங்கள பௌத்தர்களில் "கொல்வதுதான் கூடாது " விற்பனைக்கு தயாராக இருந்தால் உற்கொள்ளலாம் என கருதுபவர்களும் இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழ் சிங்கள விவசாயிகள் பாலிற்காக மாத்திரமன்றி இறைச்சியிற்காகவும் ஆடு மாடுகளை வளர்க்கிறார்கள், அவர்களது பொருளாதாரம் அதில் தங்கியுமிருக்கிறது. பொதுவாக ஆடு அல்லது மாடு வயது சென்று இயற்கையாக இறந்து போவது மிக மிக அரிது.
உயிரினங்களை கொள்ளக் கூடாது என்பவர்கள் தர்க்க ரீதியாக பன்றியைக் கொல்தல், மீன்பிடிக் கைத்தொழில், இறைச்சி கோழி வளர்ப்பு என்பவற்றையும் எதிர்க்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை...
என்றாலும் இறைச்சிக்கடை நடாத்தும் நம்மவர் பல்வேறு இலக்குகளுக்காக மிருகவதை கோஷங்களுடன் வெளிக் கிளம்பும் சக்திகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும்..!
அனுமதிப் பத்திரங்களுடன் வியாபாரம் செய்பவர்கள் நவீன சந்தைப் படுத்தல் முறைகளை கையாளல் வேண்டும், அடுத்தவர் மனதை பாதிக்கும் காட்சிப் படுத்தல் முறைகளை கைவிடல் வேண்டும்.
முஸ்லிம்களது இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக கசாப்புக் கடைகள் வந்து விடுமாயின் வாழ்விடங்கள் கள நிலவரங்களை கவனத்திற் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் கசாப்புக் கடைகளை தற்காலிகமாகவேனும் மூடி விடுவது குறித்து கலந்தாலோசனைகள் செய்து முடிவுகளுக்கு வரலாம்.
அடுத்த சமூகங்கள் தமது மத விழுமியங்களை முன்னிறுத்தி நாடு முழுவதுமுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட முடிவெடுப்பின், முஸ்லிம்களும் இறைச்சிக் கடைகளை மூடி விட முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
என்றாலும் தற்பொழுது சூடு பிடித்து வரும் இறைச்சிக் கடை அரசியல் குறித்து முஸ்லிம் சமூகம் அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.

நாங்களும்தான் சாராயம் குடிக்காதே.. சூதாடாதே.. கொள்ளையடிக்காதே.. கொலை செய்யாதே.. அடுத்தவன் குடியைக் கெடுக்காதே.. விபச்சாரம் செய்யாதே.. இதெல்லாம் பஞசமா பாதகங்கள் என்று அல்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து வலியுறுத்தி வருகிறோம்.
ReplyDeleteஅதற்காக நம்மீதே நாம் பெற்ரோல் ஊற்றிக் கொண்டு உயிரைத் துறக்கச் செய்து சமூகங்களின் மத்தியில் உணர்ச்சியை உசுப்பேத்தி விடுவது எந்த வகையில் தர்மாகும்?
இறைவன்தான் இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் நாம் நமது இறைச்சிக்கடைகளின் தோற்றத்திலும் ஒர மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அதே பெட்டிக்கடை அமைப்பு... அதே இரத்தச் சிவப்பு மை.. அதே சந்து சந்தூக இரத்தம் சொட்டச் சொட்ட தூக்கப்பட்டிருக்கும் கால்நடைகளின் பாகங்கள்..
ஏன் பொதிசெய்யப்பட்டு குளிருட்டியில் வைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் 'பைரஹா' கோழிபோல இந்த மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பாபத், ஈரல் வியாபாரத்தையும் நம்மவர்கள் செய்வதற்கு முன்வரக்கூடாது.
காத்தான்குடி போன்ற முழுவதும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகரங்களில் இந்த மாற்றத்திற்கான முன்மாதிரி நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
கசாப்புக்கடை அரசியல் :
ReplyDeleteஅமெரிக்கா அவுஸ்திரேலியா இஸ்ரேல் போன்ற நாடுகளின் இறைச்சி கோழி மற்றும் உற்பத்திப் பொருள்களுக்கு இலங்கையில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த பல்தேசியக் கம்பனிகளும் அவற்றின் உள்ளூர் முகவர்களும் முனைவதாக தெரிகிறது.
வெளியே செல்லும் வெளிநாட்டுச் செலாவணி, விவசாயம் கால் நடை வளர்ப்பில் தங்கியுள்ள கிராமத்து சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் பொருளாதாரம் , தொழில் வாய்ப்பு இல்லாமல் போதல் போன்ற பல்வேறு பரிமானாங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பாடல் வேண்டும்!
குறிப்பாக பல்தேசியக் கம்பனிகளின் செல்வாக்கை எதிர்க்கும் ஜே வீ பீ , பெரடுகாமி, சமாஜவாதி கட்சிகளின் அபிப்பிராயங்கள் திரட்டப் படல் வேண்டும்.
விடுக்கப் படும் சவால்களின் பின்னாலுள்ள உள் நாட்டு பிற நாட்டு அரசியல் இராஜதந்திர வர்த்தக மற்றும் இராணுவ இலக்குகளை அடையாளம் கண்டு நிதானமாக அவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டும்.