Header Ads



கோத்தாவின் உத்தரவு..? ஆஸாத் சாலி 90 நாள் தடுத்துவைக்கப்படலாம்..!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலியை 90 நாட்களுக்கு தடுத்து வைக்கும் சாத்தியமிருப்பதாக ஆஸாத் சாலிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கேத்தபய ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்படுபவர்களை நீசதிமன்ற விசாரணையின்றி தடுத்துவைக்க முடியும். அந்தவகையில் ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டு3 நாட்கள் கடந்துவிட்டன.

இதனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவுப்படி ஆஸாத் சாலி தடுத்துவைக்கப்பட்டிருக்கலாமெனவும், சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக ஆஸாத் சாலிய இவ்வாறு தடுத்துவைக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

7 comments:

  1. அதிகார போதை தலைக்கு ஏறிவிட்டால் இப்படித்தான் தலை கால் புரியாமல் பேயாட்டம் போடுவார்கள். அனால் நிச்சயம் இறைவனின் தீர்ப்பு நீதியின் பக்கமாகத்தான் இருக்கும். ஆணவக்காரன் நிலைத்து இருந்ததாக சரித்திரமில்லை. அழிவு நெருங்கி விட்டதற்கான அறிகுறிதான் இவைகள்.

    ReplyDelete
  2. Jungle governance by Thugs and Criminals...This is wonder of Asia.

    ReplyDelete
  3. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم

    அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக்க பீ நுஹுரிஹிம் வநஊது பிக மின் ஷுறூரிஹிம்.

    எதிரிகளையும் ஆட்சியாளர்களையும் காணும் போது இதனை ஓதிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  4. நாம் அனைவரு துஆச்செய்வோம்,அட்டூளியக்காரர்களூ உரிய தண்டனையை அல்லாஹ் வழங்கி நம்மைப்பாதுகாக்கவேண்டும்.

    ReplyDelete
  5. முஸ்லிம்கள் தெருத்தெருவாய் 'நாரே தக்பீர்' சொல்லி நோன்பு நோற்று, அடிபட்டு உதை வாங்கி உரிமைக் கட்சியை வளர்த்து இலட்சக்கணக்காய் வாக்களித்து அரசுக்கு முட்டுக் கொடுத்து ஆட்சியை நிலை நிறுத்தியதன் பலன்...

    முஸ்லிம் மக்களின் வாக்குரிமைகளால் தெரிவுசெய்யப்பட்ட ஆனானப்பட்ட அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் அடங்கிப் போயிருக்க அரசாங்கத்தில் சம்பளம் வாங்கும் ஒரு அமைச்சின் செயலாளர் எம் சமூகத்தின் தலைவனை இன்று அடக்கி வைத்திருக்கிறார்

    நாட்டுக்குச் சுதந்திரமும் நமக்கு வாக்குரிமையும் கிடைக்காமலேயே இருந்திருக்கலாம்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  6. வினை விதைப்பவன் வினை அறுப்பான். இறைவனின் பிடியில் இந்த கோத்தபாய யார்? பெரும் வல்லரசு நாடுகளை ஆட்சி புரிந்தவர்களே தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாறுகள் கோத்தபாயவுக்கு மறந்திருக்கும். இறைவா அநியாயக்காரர்களுக்கு எம் கண் முன்னே தண்டனை வழங்குவாயாக.

    ReplyDelete
  7. நாம் அனைவரு துஆச்செய்வோம்

    ReplyDelete

Powered by Blogger.